Saturday 27th of April 2024 07:13:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!

கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!


பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாடு சுறுசறுப்பாக செயற்பட்டு வருவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நடைபெற்று முடிந்த இலங்கை பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாடு மிக சுறு சுறுப்பாகச் செயற்படுவதால் சமூகத்தில் கொரோனா பரவுவதற்கான ஆபத்து அதிகளவில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தள்ளது.

தொற்று நோயியல் பிரிவு தலைவர் சுதத் சமரவீர தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது நாட்டில் பாடசாலைகள் ஆரம்பித்தல் மற்றும் புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமையே இதற்கு காரணமாகும்.

இந்த சூழ்நிலையில் சமூகத்தில் கொரோனா நோயாளி எவரும் அடையாளம் காணப்பட்டாலும், கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அது பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எனவே, கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE